ஆடாது அசங்காது வா கண்ணா
Aadadhu Asangathu vaa Kannaa
ராகம்: மத்யமாவதி
தாளம்: ஆதி
இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
ஆடாது அசங்காது வா கண்ணா
உன் ஆடலில் ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுதே எனவே
அனுபல்லவி
ஆடலைக் காணத்-தில்லை அம்பலத்திறைவனும் (அம்பலத்து + இறைவனும்)
தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே
ஒரு மாமயில் இறகணி (இறகு+அணி) மாதவனே நீ
சின்னஞ் சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே (சிலம்பு + ஒலித்திடுமே)
அதைச்-செவிமடுத்தப் பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே
மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே
பன்னிரு கை இறைவன் ஏறு மயில் ஒன்று
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே
குழல் பாடி வரும் அழகா
உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனக மணி அசையும் உனது திரு நடனம்
கண் பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே
Click the link to listen to “ஆடாது அசங்காது வா கண்ணா” sung by Smt. Nithyashree.